ADDED : பிப் 04, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
திருப்பூர் அமராவதிபாளையத்தில் கடந்த வாரம் நடந்த சந்தைக்கு 908 மாடுகள் வந்தன. நேற்றுமுன்தினம் நடந்த சந்தைக்கு 874 மாடுகள் மட்டுமே வந்தன.
கன்றுக்குட்டி, 6,000 - 7,000, காளை, 23 ஆயிரம் - 28 ஆயிரம், எருது 28 ஆயிரம் - 31 ஆயிரம், மாடு 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
சுபமுகூர்த்தம், அடுத்தடுத்த விசேஷங்களால், மாடு வரத்து குறைந்தது. கேரள வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். சந்தையில் நேற்றுமுன்தினம், 1.25 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.