/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தி சென்னை சில்க்ஸ்'--ன் ஆவணப்படம் வெளியீடு
/
'தி சென்னை சில்க்ஸ்'--ன் ஆவணப்படம் வெளியீடு
ADDED : மார் 01, 2026 06:04 AM

திருப்பூர்: 'தி சென்னை சில்க்ஸ்' குழுமம் தயாரித்த, இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
கடந்த 2024ல், 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரன், முதன் முறையாக ஆவணப்படம் தயாரித்தார். இப்படத்துக்கு, ஜனாதிபதி விருது கிடைத்தது. தற்போது, 'நிலம்+நீதி= கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்' என்ற ஆவணப்படத்தை, இரண்டாவதாக தயாரித்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா, சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடந்தது. 'சக்தி மசாலா' சாந்தி துரைசாமி குத்து விளக்கேற்றினார். சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமை வகித்து, ஆவணப்படத்தை வெளியிட்டு பேசினார். நடிகர் சிவகுமார், திரைப்பட தொகுப்பாளர் லெனின், சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, எழுத்தாளர் கண்ணன், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'தி சென்னை சில்க்ஸ்' குழும நிர்வாக இயக்குனர் சந்திரன் நன்றி கூறினார்.

