sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

  விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு

/

  விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு

  விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு

  விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு


ADDED : ஜூன் 15, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது.

வைகாசி விசாக தேர்த்திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாகசால பூஜைகள், பல்வேறு சமுதாயத்தினரின் மண்டப கட்டளை பூஜை, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வாகன காட்சி என, விழா களைகட்டியது.

கடந்த 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 10ம் தேதி வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது.

வண்டித்தாரை, பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம், மஹா தரிசனம், மஞ்சள் நீர் உற்சவ பூஜைகள், மலர் பல்லக்கு ஊர்வல காட்சிகள் நடந்தன; நேற்று, கோவில் பட்டாச்சார்யார்கள், சிவாச்சார்யார்கள் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி கூறும் வகையில், காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us