sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது

/

போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது

போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது

போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறப்பு விழா காண்கிறது


ADDED : அக் 07, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 07, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகர போ லீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் கடந்த, 2014ம் ஆண்டு முதல் பூலுவபட்டியில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர், 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில், 2.24 ஏக்கர் பரப்பில், ஐந்து மாடிகளுடன் கட்டப்பட்டது. கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இச்சூழலில், புதிய கமிஷனர் அலுவலகம் கட்டடம் இன்று காலை திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதன் பின், அமைச்சர்கள், கலெக்டர், கமிஷனர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us