/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 லட்சம் மரக்கன்றுகள்; இலக்கு நெருங்கியது
/
3 லட்சம் மரக்கன்றுகள்; இலக்கு நெருங்கியது
ADDED : டிச 01, 2024 11:22 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டம், 10வது வெற்றி விழாவை கொண்டாட தயாராகிவிட்டது. கடந்த, 10 ஆண்டுகளில், 21 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள 'வெற்றி' அமைப்பு, 18 லட்சம் கன்றுகளை மரங்களாக வளர்த்து சாதனை படைத்துள்ளது.
சின்னத்தாராபுரம் அடுத்த சுண்டக்காம்பாளையத்தில், சேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் மரக்கன்று நடப்பட்டது. மகோகனி -110, சந்தனம் -100, தேக்கு -40, வேங்கை -2, செம்மரம் -2, ஈட்டி -2 என, 256 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
கடந்த மாதம், 28ம் தேதி நிலவரப்படி, மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கில், இரண்டு லட்சத்து, 92 ஆயிரத்து, 647 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.