sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை: இரு மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

/

நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை: இரு மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை: இரு மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

நிரம்பும் தருவாயில் திருமூர்த்தி அணை: இரு மாநில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 


ADDED : அக் 25, 2025 06:50 AM

Google News

ADDED : அக் 25, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், பாலாறு வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை, பி.ஏ,பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றாக உள்ளது. திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், அணை நீர் மட்டம் ஒரு வாரத்தில், 12 அடி உயர்ந்தது.

நேற்று, மதியம் நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 51.10 அடி நீர் மட்டம் உள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அணை விரைவில் நிரம்பி, உபரி நீர் பாலாற்றில் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், பாலாற்றின் வழியோரத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நீர் வளத்துறை சார்பில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையில் துவங்கும் பாலாறு, ஆழியாற்றில் கலந்து, கேரளா மாநிலத்திலுள்ள பாரதப்புழா ஆற்றில் இணைகிறது.

இதனால், நீர்வளத்துறை சார்பில், தமிழக, கேரள மாநிலம் வழியாக பயணிக்கும் ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராம மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை, கடந்த, 2021 டிச., 10ம் தேதி நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நான்கு ஆண்டுக்கு பின், தற்போது அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us