sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்

/

திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்

திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்

திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்


ADDED : செப் 29, 2025 12:18 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா நடந்தது.

முன்னதாக காலை, 7:00 மணிக்கு கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்கு சிவனடியார்கள் வழிபாடு செய்த பின், சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் திருக்கழுக்குன்றம் தாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் விழா துவங்கியது. திருவாசகத்தை ஓதினால் கருங்கல் மனதும் கரைந்து உருகும் என்பதற்கு ஏற்ப சிவனடியார்கள் திருவாசகத்தை குழுவாக இணைந்து மனமுருக பாடினர்.

தாராபுரம் வரன் பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகளார், காமாட்சிபுரம் ஆதினம் தம்புரான் சுவாமிகள், கோவை சிவ கார்த்திகேயன் சுவாமிகள், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமு, நாகேஸ்வர சுவாமி அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us