/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்
/
சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்
சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்
சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருவாசகம் முற்றோதல்
ADDED : ஜன 26, 2024 06:05 PM

கொங்கு ஏழு சிவ தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச் சிதம்பரம் என போற்றப்படுவதும் அவிநாசி அருகே சேவூர் அறம்வளர்த்தநாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் திருப்பணி நடைபெற அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி கூறியும், விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரன்பணி அறக்கட்டளை, திரு நானா சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தலைவர் பவானி தியாகராசர் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் அவிநாசி, திருப்பூர், சேவூர் வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

