sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி

/

மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி

மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி

மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி


ADDED : மே 21, 2025 02:37 AM

Google News

ADDED : மே 21, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் ராஜா, 46. இவரது மனைவி ஜானகி, 40. தம்பதிக்கு ஹேமா நேத்ரா, 15, மவுனா ஷெரின், 11, என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜானகி, ஈரோடு மாவட்டம், அரச்சலுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். ராஜா கேரளாவில், கேபிள் ஆப்பரேட்டராக இருந்தார். குடும்பத்துடன் அரச்சலுாரில் வசித்தனர்.

இரு வாரம் முன் கேரளா சென்ற குடும்பத்தினர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து காரில் அரச்சலுார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நத்தக்காடையூர் அருகே சென்றபோது திடீரென கார், சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில், ராஜா, ஜானகி மற்றும் ஹேமா நேத்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் போராடிய மவுனா ஷெரினை அருகிலிருந்தோர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us