sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாநில அளவில் திருப்பூர் 2ம் இடம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதில் சபாஷ்

/

 மாநில அளவில் திருப்பூர் 2ம் இடம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதில் சபாஷ்

 மாநில அளவில் திருப்பூர் 2ம் இடம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதில் சபாஷ்

 மாநில அளவில் திருப்பூர் 2ம் இடம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதில் சபாஷ்


ADDED : டிச 15, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழக அளவில், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், 88 சதவீதம் பணியை நிறைவு செய்து, இலக்கை எட்டி பிடிப்பதில், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில், மத்திய அரசின் பி.எம். கிஷான் திட்டம், 2019 முதல் செயல்பாட்டில் இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, மத்திய அரசு சார்பில், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மானிய விலையில் விவசாய இடுபொருள், உபகரணம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயன், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சரியான முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.

அடையாள எண் வைத்திருந்தால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட வேளாண் மற்றும் உழவர் நலம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைய முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'மாநில அளவில், 75 சதவீதம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே இப்பயன்கள் கிடைக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது; அப்போது தான், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, மாநில அரசுக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மாநில அளவில் 46.44 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 32.77 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

சராசரியாக, 70 சதவீத விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும், 5 சதவீத இலக்கை எட்டி பிடிக்க, வேளாண் துறையினர் திணறி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 1,07,658 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; இதில், 94,420 பேருக்கு அடையாள எண் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அளவில், இலக்கை எட்டுவதில் திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடத்தில் இருக்கிறது என, வேளாண் துறையினர் கூறுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், 89 சதவீத விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கி, முதலிடத்தில் இருக்கிறது.

வேளாண் துறையினர் கூறியதாவது:

l திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வசித்து, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பெரும் தொழிலதிபர்கள் பலர், வெவ்வேறு ஊர்களில், பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் வைத்துள்ளனர்; அவர்கள், 2,000 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்ட மானிய உதவிகளை பெற விரும்பாததால், அடையாள அட்டை பெறுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

l மானாவாரி விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, வேளாண் துறையின் மானிய திட்டங்களின் பயன், பெரியளவில் இல்லாததால், அவர்களும் அடையாள அட்டை எண் பெற முன்வருவதில்லை.

l திட்டத்தின் பயன் பெற, விவசாய நிலங்கள் சப்-டிவிஷன் செய்யப்பட்டு, அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், கூட்டுப்பட்டாவில் உள்ள பலர், பல்வேறு காரணங்களால் சப்-டிவிஷன் செய்யாமல் உள்ளதால், அவர்களுக்கும் அடையாள எண் வழங்க முடியாத சூழல் உள்ளது.






      Dinamalar
      Follow us