sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்

/

80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்

80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்

80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்


ADDED : மார் 08, 2024 01:35 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அருகே, 80 அடி ஆழ கல்குவாரி ஒன்றில், டிராக்டருடன் தவறி விழுந்து, தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணி, 65; இவரது மனைவி லட்சுமி, 58; 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மணி, இங்குள்ள கல்குவாரி ஒன்றில் டிரில்லராக வேலை பார்க்கிறார்.

நேற்று காலை, மகன் ராதாகிருஷ்ணன், மருமகன் ரமேஷ், டிராக்டர் டிரைவர் சண்முக உடையான் ஆகியோர் குவாரிக்குள் வேலை செய்ய சென்றனர். இடையில், டிராக்டரை நிறுத்திவிட்டு சண்முக உடையான் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

இதற்கிடையே, டிரில்லிங் பணியை தொடர்வதற்காக, டிராக்டரில் ஏறிய மணி, கம்ப்ரஸரை இயக்க செய்ய வேண்டி டிராக்டரை இயக்கினார். கியரில் இருந்த டிராக்டர், 80 அடி ஆழ கல்குவாரிக்குள் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த மணி, அதே இடத்தில் இறந்தார். பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us