ADDED : ஜூலை 16, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; சூலுார், பாப்பம்பட்டியை சேர்ந்தவர், திருமலை குமார் 39; லாரி டிரைவர்.
நேற்று முன்தினம் இரவு, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சாப்பிட சென்றனர். அங்கிருந்த திருநங்கை ஒருவர், திருமலை குமாரிடம் மொபைல் போனை பறித்துக்கொண்டு, கூகுள் பே மூலம், 7,500 ரூபாயை எடுத்துக் கொண்டார். புகாரின் பேரில், பல்லடம் போலீசார், திருநங்கை தேஜாவை, 25 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.