/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிஷப் உபகாரசாமி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
பிஷப் உபகாரசாமி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : செப் 24, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
பள்ளி தாளாளர் மரிய அந்தோணிராஜ் தலைமைவகித்தார். தலைமை ஆசிரியர் பீட்டர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மார்ட்டின் லுார்துராஜ் உள்பட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், 'பசுமையை பாதுகாப்போம்' என உறுதிமொழியேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில், புங்கன், சொர்க்கம், மகிழ மரக்கன்றுகள் நடப்பட்டன.