sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி புதிய ஆயக்கட்டுக்கு இம்மாத இறுதி வரை தண்ணீர்

/

அமராவதி புதிய ஆயக்கட்டுக்கு இம்மாத இறுதி வரை தண்ணீர்

அமராவதி புதிய ஆயக்கட்டுக்கு இம்மாத இறுதி வரை தண்ணீர்

அமராவதி புதிய ஆயக்கட்டுக்கு இம்மாத இறுதி வரை தண்ணீர்


ADDED : பிப் 13, 2025 07:09 AM

Google News

ADDED : பிப் 13, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெறும், 21,867 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, செப்., 28 முதல், பிப்., 9 வரை நீர் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

நீர் திறப்பை தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்டது.

சீதோஷ்ண நிலை மாற்றம், இலை கருகல், வேர் அழுகல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடவு செய்த ஒரு மாதத்தில், வேடபட்டி, குமரலிங்கம், ஜோத்தம்பட்டி என புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், கடந்த நவ., - மற்றும் டிச., மாதங்களில் வளர்ந்த நெற் பயிர்கள் கருகின.

உரிய ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். பல ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் பாதித்த நிலையில், அவற்றை அழித்த விவசாயிகள் மீண்டும் உழவு செய்து, நாற்றங்கால் அமைத்து, மீண்டும் நெற் பயிர் சாகுபடி மேற்கொண்டனர்.

தற்போது, அவை நிலைப்பயிர்களாக உள்ள நிலையில், அவற்றை காப்பாற்ற, சாகுபடிக்கு நீர் திறப்பை நீடிக்க வேண்டும். விவசாயிகள் சங்கம் சார்பில், 'புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, மார்ச் இறுதி வரை, அமராவதி அணையிலிருந்து நீர் வழங்க வேண்டும்' என வலியுறுத்திஉள்ளனர்.

அணையில் நீர் இருப்பு திருப்தியாக உள்ள நிலையில், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, கூடுதல் காலம் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், ''புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, பிப்., 9ல், பாசனத்திற்கு நீர் திறப்பு நிறைவு பெற்ற நிலையில், இம்மாத இறுதி வரை நீர் வழங்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு கூடுதல் காலம் நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதால், அணை நீர் இருப்பு, வரத்தை கணக்கிட்டு, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், அரசு அனுமதி பெற்று நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us