sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்

/

தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்

தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்

தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்


ADDED : ஏப் 17, 2025 10:25 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை நகரம், தலைகொண்டம்மன் கோவிலில் இருந்து துவங்கி, தங்கம்மாள் ஓடை பாலம் வழியாக ராகல்பாவி செல்லும் இணைப்பு ரோட்டை, முன்பு கிராம மக்கள் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இந்த ரோடு கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில், அகல ரயில்பாதை பணிகளின் போது, நகர எல்லை முடியும் இடத்தில், தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. தாழ்வாக கட்டப்பட்ட இந்த பாலத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.

ஒரு மழைக்கு தண்ணீர் தேங்கினால், பல மாதங்களுக்கு பாலத்தை கடந்து செல்ல முடியாது. இதனால், காலை நேரங்களில் அவ்வழியாக, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரமுடிவதில்லை.

ராகல்பாவி பிரிவுக்கு சென்று அங்கிருந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக, நகருக்கு வர வேண்டியுள்ளது. ரயில்வே தரை மட்ட பாலத்தில், தேங்கும் தண்ணீரை அகற்ற, எந்த துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. பல கிராம மக்கள் பாதித்தும், நீண்ட காலமாக இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தர தீர்வை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us