sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மையம் வேண்டும்

/

மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மையம் வேண்டும்

மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மையம் வேண்டும்

மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மையம் வேண்டும்


ADDED : ஏப் 21, 2025 06:10 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பள்ளி செல்லும் வயதில், செல்ல முடியாமல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 வட்டாரங்களிலும் மையங்கள் செயல்படுகின்றன.

இதில், 6 முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான, உடல்நல பராமரிப்பு, மனநல மேம்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்க, சிறப்பு ஆசிரியர்களும் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில், 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மையம் உள்ளது.

மற்ற வட்டாரங்களில் இல்லை. பொருளாதாரத்தில், பின்தங்கிய குடும்பத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முறையான பயிற்சி வழங்க, மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில்தான் பலரும் உள்ளனர்.

இதனால், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் போல, குழந்தைகளுக்கான மையம் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அனைத்து வட்டாரங்களிலும் 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 'தொடக்க நிலை பயிற்சி மையம்', அமைப்பதற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வயதுவரம்பில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள், மற்றும் அவர்களுக்கு தேவையான பயிற்சி பொருட்கள் வழங்குவது குறித்தும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

ஆனால் பட்டியலோடு மட்டுமே இந்தசிறப்பு திட்டம் முடங்கிவிட்டது.






      Dinamalar
      Follow us