sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?

/

கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?

கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?

கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயங்கும்?


ADDED : ஜன 05, 2025 02:09 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கோவை - சேலம் மெமு ரயில் எப்போது இயக்கப்படும் என்று பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கரூரில் இருந்து திருச்சிக்கு வாரத்தின் ஆறு நாட்கள் (ஞாயிறு தவிர) மெமு ரயில் (எண்:06116) அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் இரவு, 08:05க்கு புறப்படும் ரயில் மகாதானபுரம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சி கோட்டை ஸ்டேஷன்களில் நின்று, திருச்சிக்கு இரவு, 10:50க்கு சென்று சேர்கிறது.

மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து, அதிகாலை 5:25க்கு புறப்படும் ரயில் (எண்:06115) கரூருக்கு காலை, 7:20 க்கு வரும். ஐந்து பொது பெட்டிகளோடு, இருபுற இன்ஜின் அமைப்புடன் இந்த ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில், மார்ச், 31 வரை ரயில் இயங்க உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில், சேலம் - கோவை இடையே மெமு ரயில் பத்து ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. எட்டு பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ரயிலில், தினசரி, 750 முதல், 850 பேர் பயணித்து வந்தனர். மாதாந்திர பாஸ் பெற்று, 500 க்கும் மேற்பட்டோர் பயணித்து வந்தனர்.

ஊரடங்கின்போது 2020ல் நிறுத்தப்பட்ட ரயில் இயக்கம் இன்னும் துவங்கப்படவில்லை. கோவை - சேலம் மெமு ரயில் மீண்டும் இயக்கத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us