/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பு குமரலிங்கத்தில் தீர்வு எப்போது?
/
பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பு குமரலிங்கத்தில் தீர்வு எப்போது?
பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பு குமரலிங்கத்தில் தீர்வு எப்போது?
பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பு குமரலிங்கத்தில் தீர்வு எப்போது?
ADDED : பிப் 05, 2025 11:17 PM
உடுமலை: அமராவதி பாசன கால்வாயில், குமரலிங்கம் பகுதியில், கழிவு நீர் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அப்பகுதி விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி அணையை ஆதாரமாகக்கொண்ட, பழைய, ஆயக்கட்டு பாசனத்தில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆற்றில் திறந்து விடப்படும் பாசன நீர் விளைநிலங்களுக்கு, கால்வாய் வாயிலாக பிரித்தளிக்கப்படுகிறது.
அப்பகுதி பசுமைக்கும், நெல் உற்பத்திக்கும் ஆதாரமான பாசன கால்வாய்களின் தற்போதைய நிலை, விவசாயிகளுக்கு கண்ணீர் வரவழைக்கும் நிலையில் உள்ளது. உதாரணமாக குமரலிங்கம் பகுதியில், அமராவதி பாசன நீரை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
மடத்துக்குளம் தாலுகாவில், முக்கிய நெல் உற்பத்தி மையமாக இப்பகுதி உள்ளது. ஆனால், பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் நிலை, படுமோசமான நிலையில் உள்ளது.
பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வடிகால் அமைத்து, நேரடியாக பாசன கால்வாயில், கழிவு நீர் கலக்கும் வகையில் செய்துள்ளனர். நாள்தோறும், பல ஆயிரம் லிட்டர் கழிவு நீர் பாசன கால்வாயில் கலந்து, விளைநிலங்களுக்கு அந்த தண்ணீர் செல்கிறது.
பேரூராட்சி எல்லை வரை தெளிவாக வரும் பாசன நீர், அப்பகுதியை தாண்டும் போது கழிவு நீரால், கருப்பாக மாறி பயணிக்கிறது. துார்வாரப்படாத கால்வாயில், கழிவு நீர் தேங்கும் போது, ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் வாழ், களைச்செடிகள், பாசன கால்வாயை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது.
பாசனத்துக்கு செல்லும் தண்ணீர், தடைபடும் அளவுக்கு, இத்தகைய களைச்செடிகள் கால்வாய் முழுவதும் காணப்படுகிறது. இதனால், கொசுத்தொல்லையும் அதிகரித்து, அப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். கால்நடைகளும், தண்ணீரை குடிக்க முடியாத சூழல் உள்ளது.
ஒவ்வொரு பாசன காலத்துக்கு முன்பு, விவசாயிகளே கால்வாயில் இறங்கி களைச்செடிகளே அகற்றும் நிலை தொடர்கிறது.
இந்த அவல நிலை நீண்ட காலமாக தொடர்ந்தும், பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் அருப்தியில் உள்ளனர்.