ADDED : ஜூன் 29, 2026 11:44 PM

அ நிறம் | அளவு
திருப்பூர் பகுதி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, மக்களுக்கு அருகாமையிலேயே தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என மா.கம்யூ., கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் இதயம், தலைக்காயம், சிறுநீரகம், நரம்பியல் சிகிச்சைகளுக்கு கூடுதல் சிறப்பு மருத்துவர்களை நியமிக்கவும், மருந்து வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
