ADDED : செப் 15, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், 25. ஐ.டி., நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு தனது பைக்கில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நியூ திருப்பூர் அருகே சென்றபோது, தொடர்ந்து வந்த தனியார் பஸ் மோதியது. படுகாயம் அடைந்த லோகோஷ் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
விபத்து குறித்து பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.