ADDED : அக் 18, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சிவன்மலை அருகே லாரி மோதியதில் இளைஞர் பலியானார்.
அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலன், 27. காங்கயத்திலுள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். விக்னேஷ், 28 என்பவருடன், டூ வீலரில் காங்கயம் சென்று வந்தார்.
சிவன்மலை அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி, டூ வீலரில் மோதியது.இந்த விபத்தில், இருவரும் படுகாயமடைந்து, கோவை தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றிபாலன் உயிரிழந்தார்.