sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

 அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்

/

 அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்

 அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்

 அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் 106 செம்மரக்கட்டை பறிமுதல்


ADDED : நவ 19, 2025 05:07 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல் நகரை சேர்ந்தவர் ரவி, 45; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. இவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு வந்த தகவலில், நேற்று மதியம் அவரது வீட்டை சோதனை செய்து, அங்கிருந்த, 2 டன் எடையுள்ள, 106 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், அ.தி.மு.க., பிரமுகர் ரவி, இரண்டு ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருவதும், அந்த வீட்டை ரவியின் அண்ணன் மகன் ரமேஷ், அவருக்கு தெரியாமல் வீட்டு பூட்டை உடைத்து பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

மேலும், ரவிக்கும், ரமேஷுக்கும் முன்விரோதம் இருந்து வருவதால், ரவியை சிக்க வைக்க ரமேஷ் செம்மரக்கட்டையை அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us