/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : நவ 02, 2025 02:12 AM
திருவண்ணாமலை: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி சிவா, 24. இவர், பிளஸ் 2 படித்து வந்த, 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, 2022, மார்ச் 11ல், பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து கடத்திச்சென்று, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். மாணவி புகார் படி, கீழ்பென்னாத்துார் போலீசார், சிவாவை போக்சோவில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி காஞ்சனா, நேற்று முன்தினம் மாலை, சிவாவிற்கு, 20 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மாணவிக்கு, அரசு தரப்பில், 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

