sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மழைக்கு இடிந்த வீட்டு சுவர் தாத்தா பலி பேரன்கள் காயம்

/

மழைக்கு இடிந்த வீட்டு சுவர் தாத்தா பலி பேரன்கள் காயம்

மழைக்கு இடிந்த வீட்டு சுவர் தாத்தா பலி பேரன்கள் காயம்

மழைக்கு இடிந்த வீட்டு சுவர் தாத்தா பலி பேரன்கள் காயம்


ADDED : அக் 15, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:ஆரணி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாத்தா பலியானார்; இரு பேரன்கள் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புஷ்பகிரியை சேர்ந்தவர் துரைசாமி, 80. இவர், சில நாட்களாக, ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள மகள் அலமேலுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார்.

சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால், ஓட்டு வீட்டின் சுவர் நனைந்து பாதிப்படைந்தது. நேற்று அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், துரைசாமி, அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அலமேலுவின் மகன்கள் திவாகர், 8, விக்னேஷ், 5, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.

மூவரும் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து மீட்டனர். துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திவாகர், விக்னேஷ் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us