sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது

/

கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது

கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது

கைத்துப்பாக்கியை காட்டி ஆசிரியரை மிரட்டியவர் கைது


ADDED : ஜூலை 30, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு; கைத்துப்பாக்கியை காட்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த, மீன் பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஏ.கே., நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 52; அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அபிராமி, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மூர்த்தி, தன் வீட்டின் மேல் தளத்தை, மீன் பண்ணை உரிமையாளரான கீழ்வணக்கம்பாடியை சேர்ந்த சையத் அலி, 48, என்பவருக்கு, ஓராண்டு குத்தகைக்கு வழங்கியிருந்தார்.

குத்தகை முடிவடைய உள்ள நிலையில், வீட்டை காலி செய்ய இரு நாட்களுக்கு முன் மூர்த்தி கூறினார். அப்போது, சையத் அலி, 'வீட்டை காலி செய்ய முடியாது. அப்படி காலி செய்ய சொன்னால், சுட்டுக் கொலை செய்து விடுவேன்' என, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார்.

அபிராமி புகாரில், தண்டராம்பட்டு போலீசார் விசாரித்து, சையத் அலியை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்தபோது, உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்து, அதை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us