sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை பி.டி.ஓ., ‍அலுவலகத்தை மக்கள் முற்றுகை

/

6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை பி.டி.ஓ., ‍அலுவலகத்தை மக்கள் முற்றுகை

6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை பி.டி.ஓ., ‍அலுவலகத்தை மக்கள் முற்றுகை

6 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை பி.டி.ஓ., ‍அலுவலகத்தை மக்கள் முற்றுகை


ADDED : செப் 11, 2025 02:00 AM

Google News

ADDED : செப் 11, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி, வந்தவாசி அருகே, 6 மாதம் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, காலி குடத்துடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தில், வந்தவாசி - திண்டிவனம் சாலை விரிவாக்க பணி நடப்பதால், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த, 6 மாதமாக குடிநீரை பஞ்., நிர்வாகம் வினியோகிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், பொதுமக்கள், விவசாய பம்பு செட்டுகளுக்கு சென்று, நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலி குடத்துடன், தெள்ளார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த ஊழியர்கள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். பணி முடிந்தவுடன், குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us