/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹாதீப கொப்பரை
/
அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹாதீப கொப்பரை
அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹாதீப கொப்பரை
அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மஹாதீப கொப்பரை
ADDED : டிச 13, 2024 02:56 AM

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பஞ்ச பூதங்கள், 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மஹா தீபம் ஏற்ற உள்ள கொப்பரை, வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், 150 கிலோ எடையில், கால் இன்ச் தடிமனுடன், 20 வளையராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்ட, 5.5 அடி உயரமும், மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் பாகம், 4 வளையம், கீழ்பாகம், 4 வளையம் பொருத்தப்பட்டுள்ளது.
கொப்பரையை சுற்றி, 'சிவ சிவ' என்ற வாசகத்துடன், அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரையப்பட்டு, காவி வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இதற்கு நேற்று சிறப்பு பூஜை செய்து, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.