sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்

/

திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்

திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்

திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை மஹாதீபம்


UPDATED : டிச 12, 2024 09:39 AM

ADDED : டிச 12, 2024 12:54 AM

Google News

UPDATED : டிச 12, 2024 09:39 AM ADDED : டிச 12, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை, பஞ்ச பூதங்கள், 'ஏகன், அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும்; 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, 4,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்களும் ஒலித்தவாறு, தீபதிருவிழா களை கட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us