/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மூளை பாதிப்பு விசாரிக்க கோர்ட் உத்தரவு விசாரிக்க கோர்ட் உத்தரவு
/
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மூளை பாதிப்பு விசாரிக்க கோர்ட் உத்தரவு விசாரிக்க கோர்ட் உத்தரவு
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மூளை பாதிப்பு விசாரிக்க கோர்ட் உத்தரவு விசாரிக்க கோர்ட் உத்தரவு
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் மூளை பாதிப்பு விசாரிக்க கோர்ட் உத்தரவு விசாரிக்க கோர்ட் உத்தரவு
ADDED : பிப் 16, 2024 01:53 AM
திருச்சி:திருச்சி, காஜாமலை பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி இக்பால். இவரது மகன், அதே பகுதியில் உள்ள காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்., மாதம், பள்ளி சென்று திரும்பிய மகனின் உடலில் பலத்த காயம் இருந்தது.
இதுகுறித்து கேட்டபோது, பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர், தேர்வில் மார்க் குறைந்ததால் தாக்கியது தெரிந்தது.
உடனடியாக மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். ஆனாலும், அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டது போல, இரவு நேரங்களில் உளறினார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, மகனின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, மூளையின் திறன், 75 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மகனை காப்பாற்ற தொடர்ந்து சிகிச்சை அளித்ததில், மூன்று லட்சம் ரூபாய் வரை செலவானது. இதுகுறித்து திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து தனது மகனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இக்பால் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க, கே.கே.நகர் போலீசார், காஜாமியான் பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர் முருகதாஸ் மீது கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் பள்ளியில் இருந்தும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.