sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

வாலிபர் கழுத்தறுத்து கொலை

/

வாலிபர் கழுத்தறுத்து கொலை

வாலிபர் கழுத்தறுத்து கொலை

வாலிபர் கழுத்தறுத்து கொலை


ADDED : ஆக 06, 2011 02:25 AM

Google News

ADDED : ஆக 06, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கல்லணை அருகே கழுத்தறுப்பட்டு கிடந்த வாலிபர் திருச்சியைச் சேர்ந்தவரா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அடுத்துள்ள கல்லணை கூகூர் பாறை அருகே நேற்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்ற விவசாயிகள் இதைப்பார்த்து தோகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீஸார், வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ஊதா நிற கைலியும், கருப்பு கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். சட்டை திருச்சி-1 என்ற முகவரியில் கனகா டைலரிடம் தைக்கப்பட்டுள்ளது. அவரது கையில் ஈஸ்வரி என்ற பச்சை குத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் அருகே கஞ்சா பொட்டலம் கிடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரத்திலிருந்த பஸ்ஸ்டாண்ட் வரை சென்று படுத்துக் கொண்டது. கொலையை இரண்டுக்கும் மேற்பட்டோர் செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us