sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'

/

கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'

கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'

கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'


ADDED : அக் 31, 2025 01:01 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: பெண்ணுடன் கள்ளக்காதலை கை விடுமாறு கூறியவரை, கொலை செய்த டிரைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ்குமார், 34. அதே ஸ்டாண்டில் டிரைவராக இருந்த, சுருளிகோவில் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 35, மிக்ஸி பழுது பார்க்கும் கடை வைத்திருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை சதீஷ்குமார் கண்டித்தார். ஆனாலும் முத்துப்பாண்டி கேட்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் கணவரிடம் கள்ளக்காதல் குறித்து சதீஷ்குமார் கூறினார்.

ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, கடந்த, 2022ம் ஆண்டு ஜூன், 30ல், கக்கன் காலனியில் உட்கார்ந்திருந்த சதீஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார், முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது; நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சதீஷ்குமாரை கொலை செய்த டிரைவர் முத்துப்பாண்டிக்கு, ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us