sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மாணவியரிடம் அத்துமீறல் பள்ளியை சூறையாடிய பெற்றோர்

/

மாணவியரிடம் அத்துமீறல் பள்ளியை சூறையாடிய பெற்றோர்

மாணவியரிடம் அத்துமீறல் பள்ளியை சூறையாடிய பெற்றோர்

மாணவியரிடம் அத்துமீறல் பள்ளியை சூறையாடிய பெற்றோர்

1


ADDED : பிப் 07, 2025 01:42 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, மணப்பாறைப்பட்டியில் குரு வித்யாலயா என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளி நிர்வாகியான சுதா என்பவரின் கணவர் வசந்தகுமார், 55, என்பவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.

சொந்த ஊருக்கு வந்துள்ள அவர், நேற்று பள்ளிக்கு சென்று, நான்காம் வகுப்பு அறைக்குச் சென்றார். அங்கு படிக்கும் மாணவியர் சிலரை அழைத்து சில்மிஷம் செய்தார்.

அந்த மாணவியர் எதிர்ப்பு தெரிவித்ததும், யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி சென்றார் என கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவியர் ஒருவர், பள்ளி நிர்வாகியின் கணவர் தவறாக தன்னிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர், பெற்றோர் சிலருடன் சென்று பள்ளி நிர்வாகியிடம் விசாரித்தார். ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகியின் கணவரை சரமாரியாக தாக்கினர்.

படுகாயமடைந்த அந்த நபர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பள்ளி நிர்வாகி கணவரின் சில்மிஷ வீடியோ பரவியது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று இரவு 9:00 மணிக்கு குரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சென்று அங்கிருந்த கார் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

தொடர்ந்து, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us