/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
எரித்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
/
எரித்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
எரித்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
எரித்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
ADDED : நவ 02, 2025 02:11 AM
திருச்சி: திருச்சியில் எரித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி, சீனிவாசா நகரை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின், 22; இவர், சத்திரம் பகுதியில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அக்., 30ம் தேதி, இன்டர்வியூ செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் புகார்படி, அரசு மருத் துவமனை போலீசார், மாணவியை தேடிய போது, நேற்று முன்தினம், சணமங்கலம் காட்டுப்பகுதியில், எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்தனர்.
கொலை நடந்த இடத்தில், கேக் மற்றும் மது பாட்டில்கள் கிடந்துள்ளன. சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவி கொலைக்கு காரணமானவர்களையும், கொலையாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனை முன், மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சு நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னும் உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

