sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

வக்கீலை வெட்டிய வாலிபர் கைது

/

வக்கீலை வெட்டிய வாலிபர் கைது

வக்கீலை வெட்டிய வாலிபர் கைது

வக்கீலை வெட்டிய வாலிபர் கைது


ADDED : மார் 16, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், வழக்கறிஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முஹமது ஜாபர் அலி, 42; வழக்கறிஞர். இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். பாலக்கரை அருகே சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஜாபர் அலி இரண்டாவது திருமணம் செய்தார்.

சில ஆண்டுகளில், அவரை பிரிந்த அந்தப் பெண், வேறொருவரை திருமணம் செய்தார். இருப்பினும், ஜாபர் அலி அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தவர் பிரிந்து சென்றார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் இம்ரான், 22, என்பவர், நேற்று முன்தினம் இரவு, கீழப்புதூர் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஜாபர் அலியை வழி மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக, பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து, நேற்று, இம்ரானை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us