sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்

/

ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்

ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்

ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்


ADDED : அக் 31, 2025 03:15 AM

Google News

ADDED : அக் 31, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி சோதனை சாவடியில் கர்நாடகாவில் இருந்து இரண்டு கார்களில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார், அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள், குட்கா இருப்பது தெரிந்தது.

விசாரணையில், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தவர், ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்த வெங்கட பிரசன்னா, 36,ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை கடத்தியவர் பெங்களூருவை சேர்ந்த உசேன், 34, என்பதும் தெரிந்தது.

மேலும், இரண்டு கார்கள், 3,360 மது பாட்டில்கள், 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். வேலுார் எஸ்.பி., மயில்வாகனன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, தலைமை காவலர் பிரபு இருவரையும் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us