/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசாருக்கு மிரட்டல்அண்ணன், தங்கை கைது
/
போலீசாருக்கு மிரட்டல்அண்ணன், தங்கை கைது
ADDED : ஜூலை 16, 2011 02:38 AM
கள்ளக்குறிச்சி:போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து கலாட்டா செய்த இருவரை போலீசார்
கைது செய்தனர்.சின்னசேலம் இந்திரா நகரை சேர்ந்த தண்டபானி மகள் சித்ரா(29).
இவர் கடந்த 13ம் தேதி இரவு 11 மணிக்கு சின்னசேலம் பழைய பஸ் நிறுத்தம் அருகே
மீன் வியாபாரம் செய்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் இரவு
நேரத்தில் வியாபாரம் செய்ய கூடாது என கூறி அவரை அனுப்பி உள்ளனர்.சித்ரா
நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த உறவினர் (அண்ணன்) சரவணனை(32)
அழைத்து வந்தார். இருவரும் அங்கிருந்த போலீஸ் ஏட்டு கருணாநிதியிடம் ஆபாசமாக
திட்டி தகராறு செய்தனர். இதனை தடுக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி,
எழுத்தர் சக்திவேல் உள்ளிட்டோருக்கு சரவணன் கொலை மிரட்டல் விடுத்தார்.இது
குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து சரவணன், சித்ராவை கைது
செய்தனர்.