sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை

/

பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை


ADDED : மார் 06, 2025 03:26 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுவேல் மகன் ஜேம்ஸ், 26; சென்னை தனியார் விளையாட்டு மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்றுனராக உள்ளார்.

இவர், கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டி, சாவியை அருகே மறைத்து வைத்துவிட்டு, குடும்பத்துடன் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் மற்றும் பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us