/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பி வீட்டிற்கு தீ வைத்த அண்ணன்
/
தம்பி வீட்டிற்கு தீ வைத்த அண்ணன்
ADDED : மார் 05, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தி.மழவராயநல்லுாரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 47; இவரது அண்ணன் ராஜாராமன். இருவருக்குமிடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
ஜானகிராமன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியதாக கூறி நேற்று அவரது பைக்கை ராஜாராமன் எடுத்துச் சென்றார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜானகிராமன் கூரை வீட்டிற்கு ராஜாராமன் தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடினார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.