/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஆக 14, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் கோபி மனைவி ராணி, 65; இவர், கடந்த 10ம் தேதி, உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.