/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2024 11:27 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவி, மகனைத் தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி தனலட்சுமி, 35; திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. சஞ்ஜிவ், 16; என்ற மகனும், திவ்யா,14; என்ற மகளும் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள சந்திரசேகர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், தனலட்சுமி 4 நாட்களுக்கு முன் கோபித்து கொண்டு பிள்ளைகளுடன் சாலாமேட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் அங்கு சென்ற சந்திரசேகர், தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்தார்.
அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்து மனைவி மற்றும் மகனையும் தாக்கினார். தடுத்த உறவினர் மோகன், 39; என்பவரையும் தாக்கினார்.
தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், சந்திரசேகர், 30; மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.