/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாட்டு வண்டியில் மணல் கடத்திய நபர் மீது வழக்கு
/
மாட்டு வண்டியில் மணல் கடத்திய நபர் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று காலை ராமரெட்டிபாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்த புதுச்சேரி மாநிலம் கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த அஞ்சாபுலி,60; என்பவரை போலீசார் நிறுத்தி, அவரிடமிருந்து மாட்டுவண்டி மற்றும் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வளவனூர் போலீசார், அஞ்சாபுலி மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.