/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
/
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : ஆக 23, 2024 12:58 AM
திண்டிவனம் : டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தைலாபுரத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசு துறைகளில் இணை செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேரடி நியமனத்தை ரத்து செய்திருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாண்டாகிறது. இங்கு பணி நியமனத்தில் இடஒதுக்கீடு இல்லை. சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அனைத்து பணி நியமனங்களும் இட ஒதுக்கீடு முறையில் நிரப்பிட வேண்டும்.
2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு அடுத்த மாதம் துவங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனுடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடி, தமிழக அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2022 அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதன்பின் இத்தேர்வு நடத்தாததால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தனியார் பள்ளிக்கு கூட வேலைக்கு செல்ல முடியவில்லை.
மின்வாரியத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், கடந்த 20 நாட்களில் 7 ஊழியர்கள் உட்பட ஓராண்டில் 70 பேர் இறந்துள்ளனர். 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

