/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில் சித்ரா பவுர்ணமி தரிசனம்
/
மயிலம் கோவிலில் சித்ரா பவுர்ணமி தரிசனம்
ADDED : ஏப் 24, 2024 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 8:00 மணிக்கு கிரிவல பக்தர்களின் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

