/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 23, 2024 07:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில், ஊரகவளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், அனைத்து பி.டி.ஓ., அலவலகங்களிலும், வழக்கமான அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

