ADDED : பிப் 26, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகனைத் தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 70; இவரது மகன் சிலம்பரசன், 32; இவர், தினமும் மது அருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். சம்பவத்தன்று தனஞ்செயனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்து சிலம்பரசனை திட்டி, தாக்கினார்.
சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தனஞ்செயனை கைது செய்தனர்.