/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
/
விக்கிரவாண்டியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
ADDED : ஆக 17, 2024 03:08 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே 400 கிராம் கஞ்சா விற்பனை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் எஸ்.பி., உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் யுவன்ராஜ், 21: என்பவரது வீட்டில் சோதனைசெய்த போது, கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுபற்றி நடத்திய விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த வெங்கடாஜலபதி, 26; என்பவர் கஞ்சா வாங்கி வந்து யுவன்ராஜிடம் கொடுத்து விற்பனை செய்ய கூறியதும், யுவன்ராஜ் சித்தணியை சேர்ந்த அழகுவேல்,40; என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
போலீசார் மூவரையும் கைது செய்து ,யுவன்ராஜ் வீட்டிலிருந்த 400 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் , ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய யமஹா பைக்,பஜாஜ் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர்
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.