/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை
ADDED : ஆக 11, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீடுபுகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த காட்டுபூஞ்சை கிராமத்தைச் சேர்நத் பாபு மனைவி மாரியம்மாள், 32; இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார்.
மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.