sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து

/

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் குடிமகன் ரகளை விழுப்புரம் பஸ் நிலையத்தில் தான் இந்த கூத்து


ADDED : ஜூலை 02, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக போலீசார் கூறிய நிலையில், பஸ் நிலையத்தில் குடிமகன் ஒருவர் சாராய பாக்கெட்டோடு வலம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் தொடார்ந்து சாராய ரெய்டுகள் நடத்தப்பட்டு, சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை ரெய்டு மூலம் கள்ளச்சாராய விற்பனை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், சாராயம் காய்ச்சுவோர், விற்பனை பற்றி மக்கள் தகவல் கூற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தீவிரமாக சாராய ரெய்டு மூலம் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக பெருமையோடு கூறி கொள்ளும் சூழலில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் ஒரு குடிமகன், கள்ளச்சாராய பாக்கெட்டை குடித்து கொண்டு, தள்ளாடி அங்குள்ள பயணிகளை அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய பாக்கெட்டோடு, குடிமகன் ஒருவர், பகல் 12.00 மணிக்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தள்ளாடி வந்ததோடு, அவர் அங்கு அமர்ந்து சாராய பாக்கெட்டை திறந்து குடித்து கொண்டு கூச்சலிட்டபடி சுற்றித்திரிந்தார்.

இதை கண்ட அங்கிருந்த பெண் பயணிகள் பலர் அச்சத்தோடு, கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டும் இவர்கள் திருந்தவே இல்லை என கூறி கொண்டும், இவர்களுக்கு சாராயம் எங்கு கிடைக்கிறது, போலீசார் என்ன செய்கின்றனர் என புலம்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us