sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை

/

கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை

கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை

கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை


ADDED : ஜூலை 30, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கண்டமங்கலத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், மேம்பாலத்தின் மீது தகர கொட்டகை அமைந்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டுமான பணிக்கான இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போனது.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் மர்ம நபர்கள் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்திற்கு அருகில் உள்ள இரும்பு பொருட்களை திருட முயன்றனர்.

அதனை, பணியில் இருந்த பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள், திருட வந்த கும்பலை கண்டித்தனர். ஆத்திரமடைந்த அந்த கும்பல் வடமாநில தொழிலாளர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து இரவு 11:00 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த போலீசார், காலை வந்து கொடுக்குமாறு கூறினர். அதன்படி நேற்று காலை புகார் கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வடமாநில தொழி லாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்த, புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us