ADDED : செப் 07, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரது மனைவி ஜெயா,62;நேற்று இரவு 7.45 மணி அளவில் முண்டியம்பாக்கத்திலுள்ள திருமண மண்டபத்திற்கு செல்ல, திருச்சி -சென்னை சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற ராயல் என்ஃபீல்டு பைக், மூதாட்டி ஜெயா மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.